Jan 9, 2012

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை!


உலகத்தண்மை கொண்ட தன் இசைக்காக, ஆஸ்கர்விருதை வென்று முதல் முறையாக வெற்றி கொண்டு
தமிழினத்துக்கும் இந்திய தேசத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் இந்த ஆஸ்கர் தமிழனுக்கு இன்று 46 வது பிறந்த நாள்.

எங்களின் தங்கமகன்  ஏ.ஆர்.ரகுமான் என்று  உலகத் தமிழினமே ஒரு குரலாய் வாழ்த்தும் இந்த இனிய நாள். பால்மனம்  மாறாத பால்ய பருவத்திலேயே இசைத்தாய் தத்தெடுத்துக் கொண்ட தவப்புதல்வன் ஏ.ஆர்.ரகுமான். இன்று அதிக எண்ணிகையில்  சர்வதேச விருதுகள் பெற்ற ஒரே இந்தியன் என்ற பெருமையையும் எட்டியிருக்கும் யாரும் எட்டமுடியாத இசை உயரத்தை ரஹ்மான் எட்டியது எப்படி!?...

இந்திப்படப் பாடல்களுக்கு தலையாட்டி ரசித்து கொண்டிருந்த தமிழர்களை... தமிழ்பாடல்களுக்கும் தலையசைக்க வைத்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்றால், அந்த இந்திக்காரர்களையே தமிழ்பாட்டுக்கு தலையாட்ட வைத்தவர் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.  இன்று உலக மக்களை தனது இசையால் வசப்படுத்தியிருக்கும் ரகுமானின் தமிழ் பாசத்தை என்னென்று சொல்வது....!

விருது விழா மேடையில் “எல்லாபுகழும் இறைவனுக்கே” என்று தமிழில் பேசி முடித்த  ரஹ்மானின் சாதனைப்பயணம் தொடர்கிறது.

கடந்த 1966-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி பிறந்த ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் ஏ.எஸ்.திலீப்குமார். ரகுமானின் தந்தை சேகர், மலையாள படவுலகில் மரியாதைக்குறிய இசையமைப்பாளராக திகழ்ந்தவர்.  தாயர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்.

ரகுமாணுக்கு 9 வயதாக இருந்தபோதே தந்தையை இழந்தார் இந்த இசையின் மைந்தன். தந்தையின் மரணத்தைவிட துக்க கரமாக இருந்த்து திலிப்குமார் குடும்பத்தின் வறுமை. அப்பா சேர்த்து வைத்து விட்டுபோன சொத்தாக வீடு முழுவதும் நிறைந்து கிடந்தன இசைக்கருவிகள். அந்த இசைக்கருவிகளை ஒவ்வொன்றாய் விற்று,  வாடகை கொடுக்க வேண்டிய நிலையைக் கண்டு உள்ளம் புழுங்கிய ரகுமான் தனது இளவயது நண்பர்களான டிரம்ஸ் சிவமணி, ஜான் ஆண்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து கீபோர்ட் பிளேயராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.  

சினிமா இசைக்கச்சேரிகளில் சின்னஞ்சிறு இளைஞனாய் கீஃபோர்டு வசித்து விட்டு ரகுமான் வாங்கிவரும் தொகை 125/- ரூபாய். பள்ளிக்கு துள்ளிச் செல்ல வேண்டிய வயதில் வீட்டுக்காக மேடையேறிய ரகுமானை உச்சி முகர்ந்தார்  அவரது அம்மா!

கச்சேரிகளுக்கு கீஃபோர்டு வாசித்துக்கொண்டே மாஸ்டர் தனராஜிடம் இசைப்பயின்ற ரகுமான்,  பதிமூன்று வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே இளையராஜாவின் அன்புக்கு பாத்திரமானார்.

பின்னர்  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு,  ஜாகீர் உசேன்,  குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் என இசைமேதைகளோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்கள் வரிசையாக கிடைக்க ஒவ்வோரு வாய்ப்பையும் இசையைக் கற்றுகொள்ளும் இடமாக மாற்றிக்கொண்டார்.
கற்றுக் கொள்வதில் இன்றும் தாகம் தனியாத ரஹ்மான் இளமையைக் கொண்டாட வேண்டிய வயதில் அமைதியான இளைஞனாக அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார், இஸ்லாம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, திலிப்குமர் என்ற தனது பெயரை ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றிக்கொண்டார்.

1992ஆம் ஆண்டு ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கியமான தருணம். தொலைகாட்சி மற்றும் வானொலி வர்த்தக விளம்பரங்களுக்கான ஜிங்கிள்ஸ் மெட்டுகளை அமைத்துக்கொடுத்து , அந்தத்துறையில் தனி முத்திரை பதித்து வந்த ரஹ்மான் தனது வருமாணத்தில் சிறிது சிறிதாக பணம் சேர்த்து தனது 25 வயதில் தனக்கென்று சொந்தமாக இசைப்பதிவு மற்றும் இசைக்கலப்பு ஸ்டூடியோவை தொடங்கினார்.
தனது வீட்டுக்குப் பின்னாலேயே தொடங்கிய  இந்த ஸ்டியொவுக்கு ‘பஞ்சதன்- ரெக்கார்ட் இன்’ என்று பெயர் சூட்டி அழகு பார்த்தார்.

இன்று ஹாலிவுட் தரத்துக்கு இணையான இசைப்பதிவு மற்றும் இசைக்கலப்பு ஸ்டூடியோக்கள், சர்வதேச இசைப்பள்ளி ஆகியவற்றை சென்னையில் அமைத்துள்ளார். அவரது இசைப்பள்ளியில் வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமல்ல, மாநகராட்சிப்பள்ளியில் படிக்கும் ஏழைமாணவர்களும் படிக்கிறார்கள் இலவசமாக.  
1991... ஜிங்கிள்ஸ் இசையில் முத்திரை பதித்துக்கொண்டிருந்த ரகுமானை யாருடைய சிபாரிசும் இல்லாமல் அழைத்தார் இந்தியாவின் இணையற்ற இயக்குனர்களில் ஒருவரான   மணிரத்னம். அதுவரை பெரிய இயக்குனர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த மணிரத்னம் ‘ரோஜா’ படத்துக்கு ரகுமானின் இசை, பின்னனி இசையை பயன்படுத்திக்கொண்டார்.


முதல் வாய்ப்பை மிகச்சரியாகப்  பயன்படுத்திக்கொண்ட ரகுமான் தனது கம்போஸிங் திறமைகளை ரோஜா படத்தில் வெளிபடுத்தி இந்திய பாரம்பரிய இசையின் வேர்களையும், உலக இசையின் ஜீவனையும் கலந்து, ஒரு புத்தம் புது இளைய இசையை கொடுத்தார். ரகுமானை தமிழகம் மட்டுமல்ல,  மொத்த இந்தியாவும் யார் இந்த இளைஞன் என்று கேட்கவைத்தது.  ரோஜாவின் இசை கோடான கோடி ரசிகர்களையும், கூடவே  தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு ரகுமானின் இசைப்பயணம் புயல் வேகத்தில் புறப்பட்டது. 1997ஆம் ஆண்டு இசையமைத்த மின்சாரக் கனவு,  2002ஆம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக மீண்டும்  தேசிய விருதுகள் தேடி வந்தன.
இன்று ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இந்த இசைப்புயல் மட்டுமே.

ரோஜாவுக்கு பிறகு தமிழ்திரையில் மட்டுமின்றி, இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரகுமான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிக்கொடி கட்டினார்.

இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குஸ்ஸார், மேஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரகுமான்.  அதேபோல முன்னணி இயக்குனர் மணிரத்ணம்  முதல் அறிமுக இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா வரை  ஈகோவுக்கு துளியும் இடமில்லாமல் தரமான இசை என்பதை மட்டுமே நோக்கமாக்க் கொண்டு பணியாற்றிய வரும் இறை நம்பிகையாளர் இந்த ரகுமான்.
இவர் எட்டும் உயரங்களுக்கு சிகரம் வைத்தது போல தற்போது ஹாலிவுட் ஜாம்பவன் ஸ்டீவன் பீல் பெர்குடன் இணைந்து பணியாற்றி, இசை ஆல்பங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார் இந்த இசைபுயல்! தொடரட்டும் அவரது சாதனைகள்.. தமிழர்களின் வாழ்த்துக்களுடன்!  Thanks to http://www.4tamilmedia.com

No comments:

Post a Comment