Feb 23, 2012

வாகன விபரங்களை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் சேவை

வாகன விபரங்களை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் சேவை: மத்திய அரசு துவக்கம்


வாகன பதிவு விபரங்களை  எஸ்எம்எஸ் மூலம் மொபைல்போனிலேயே தெரிந்து கொள்ளும் புதிய சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது. இதன்மூலம், திருட்டு  மற்றும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக கண்டுபிடுக்க முடியும்.

வாகன பெருக்கத்திற்கு தக்கவாறு திருட்டு வாகனங்களின் புழக்கமும் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் யூஸ்டு கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த நிலையில், வாகன விபரங்களை உடனடியாக தெரிந்துகொள்ள ஏதுவாக புதிய எஸ்எம்எஸ் சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது.09212357123 என்ற மொபைல் எண்ணுக்குvahan>space<சம்பந்தப்பட்ட வாகன பதிவு எண்ணை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்.

அடுத்த ஒரு சில வினாடிகளில் பதில் எஸ்எம்எஸ் மூலம் வாகனத்தின் விபரம் நம் மொபைல்போனுக்கு வந்து விழுகிறது. அதில், உரிமையாளர் பெயர், வாகனம் எந்த ரகத்தை சேர்ந்தது, வரி காலாவதி ஆகும் விபரங்கள் உள்ளன.

இதன்மூலம், சேவையின் மூலம் திருட்டு வாகனத்தை வெகு எளிதாக கண்டுபிடித்துவிடலாம். கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் விபரங்களையும் எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2003ம் ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களாக இருந்தால், அந்த வாகனம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஒரு முறையாவது சென்றிருந்தால் அந்த வாகனங்களின் விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம் போலி டாக்குமென்ட் மூலம் விற்பனைக்கு வரும் வாகனங்களையும், சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். - Thatstamil.com

Jan 12, 2012

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!


மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!




உறக்கம் என்பது நாள்தோறும் உழைத்து களைத்த உடலுக்கு அளிக்கும் ஓய்வு தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருகின்றன.

சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது. தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது.

அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். எந்த திசையில் தலைவைத்து படுப்பது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறக்கமும் திசைகளும்

கிழக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால், ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பானோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியை தருமாம்.

மேற்கு திசையில் தலைவைத்துப் படுப்பவர்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூருக்கு வந்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை தருமாம். மாமியார் வீட்டில் தங்கும் மகிழ்ச்சியைத் தருவது தெற்கு திசை. ஆனால் வடக்கில் தலை வைத்து உறங்குவது நல்லதல்ல என்கின்றன சாஸ்திரமும், விஞ்ஞானமும்.

காந்த ஈர்ப்பு விசையானது வடக்கில் தலை வைத்து உறங்குபவர்களின் ஓய்வினை குறைத்து விடுகிறதாம். எனவேதான் வடக்கு திசை ஆகாது என்கின்றனர்.

நோயாளிகளுக்கு ஏற்ற திசை

நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவில் குணம் பெற கிழக்கு திசையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மேற்கு பரவாயில்லை, தெற்கு திசை ஆயுள் பெருகும். வடக்கு கூடாது என்று மருத்துவ நூலில் கூறப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக இருக்க

உறங்கும் போது இடது பக்கமாக திரும்பி படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.

இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.

படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படுக்கையில் இடது பக்கம் திரும்பி தூங்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சியாகவும், நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கின்றனர். வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட கையாள்வதுடன், அதிக மன உறுதியுடன் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டள்ளது.

அதிகம் சம்பாதிக்கலாம்

வலது பக்கம் திரும்பி தூங்குபவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மோசமான மனநிலை ஏற்படுவதால் தூக்கத்தில் அடிக்கடி எழுவதாகவும் கூறினர். இதற்கிடையில், இடப்பக்கம் தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தாலும், வலப்பக்கம் தூங்குபவர்கள் அதிகம் சம்பாதிக்க முற்படுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

கவிழ்ந்து படுக்க கூடாது

கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப்படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
Thanks-Thatstamil.com

Jan 9, 2012

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை!


உலகத்தண்மை கொண்ட தன் இசைக்காக, ஆஸ்கர்விருதை வென்று முதல் முறையாக வெற்றி கொண்டு
தமிழினத்துக்கும் இந்திய தேசத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் இந்த ஆஸ்கர் தமிழனுக்கு இன்று 46 வது பிறந்த நாள்.

எங்களின் தங்கமகன்  ஏ.ஆர்.ரகுமான் என்று  உலகத் தமிழினமே ஒரு குரலாய் வாழ்த்தும் இந்த இனிய நாள். பால்மனம்  மாறாத பால்ய பருவத்திலேயே இசைத்தாய் தத்தெடுத்துக் கொண்ட தவப்புதல்வன் ஏ.ஆர்.ரகுமான். இன்று அதிக எண்ணிகையில்  சர்வதேச விருதுகள் பெற்ற ஒரே இந்தியன் என்ற பெருமையையும் எட்டியிருக்கும் யாரும் எட்டமுடியாத இசை உயரத்தை ரஹ்மான் எட்டியது எப்படி!?...

இந்திப்படப் பாடல்களுக்கு தலையாட்டி ரசித்து கொண்டிருந்த தமிழர்களை... தமிழ்பாடல்களுக்கும் தலையசைக்க வைத்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்றால், அந்த இந்திக்காரர்களையே தமிழ்பாட்டுக்கு தலையாட்ட வைத்தவர் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.  இன்று உலக மக்களை தனது இசையால் வசப்படுத்தியிருக்கும் ரகுமானின் தமிழ் பாசத்தை என்னென்று சொல்வது....!

விருது விழா மேடையில் “எல்லாபுகழும் இறைவனுக்கே” என்று தமிழில் பேசி முடித்த  ரஹ்மானின் சாதனைப்பயணம் தொடர்கிறது.

கடந்த 1966-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி பிறந்த ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் ஏ.எஸ்.திலீப்குமார். ரகுமானின் தந்தை சேகர், மலையாள படவுலகில் மரியாதைக்குறிய இசையமைப்பாளராக திகழ்ந்தவர்.  தாயர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்.

ரகுமாணுக்கு 9 வயதாக இருந்தபோதே தந்தையை இழந்தார் இந்த இசையின் மைந்தன். தந்தையின் மரணத்தைவிட துக்க கரமாக இருந்த்து திலிப்குமார் குடும்பத்தின் வறுமை. அப்பா சேர்த்து வைத்து விட்டுபோன சொத்தாக வீடு முழுவதும் நிறைந்து கிடந்தன இசைக்கருவிகள். அந்த இசைக்கருவிகளை ஒவ்வொன்றாய் விற்று,  வாடகை கொடுக்க வேண்டிய நிலையைக் கண்டு உள்ளம் புழுங்கிய ரகுமான் தனது இளவயது நண்பர்களான டிரம்ஸ் சிவமணி, ஜான் ஆண்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து கீபோர்ட் பிளேயராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.  

சினிமா இசைக்கச்சேரிகளில் சின்னஞ்சிறு இளைஞனாய் கீஃபோர்டு வசித்து விட்டு ரகுமான் வாங்கிவரும் தொகை 125/- ரூபாய். பள்ளிக்கு துள்ளிச் செல்ல வேண்டிய வயதில் வீட்டுக்காக மேடையேறிய ரகுமானை உச்சி முகர்ந்தார்  அவரது அம்மா!

கச்சேரிகளுக்கு கீஃபோர்டு வாசித்துக்கொண்டே மாஸ்டர் தனராஜிடம் இசைப்பயின்ற ரகுமான்,  பதிமூன்று வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே இளையராஜாவின் அன்புக்கு பாத்திரமானார்.

பின்னர்  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு,  ஜாகீர் உசேன்,  குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் என இசைமேதைகளோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்கள் வரிசையாக கிடைக்க ஒவ்வோரு வாய்ப்பையும் இசையைக் கற்றுகொள்ளும் இடமாக மாற்றிக்கொண்டார்.
கற்றுக் கொள்வதில் இன்றும் தாகம் தனியாத ரஹ்மான் இளமையைக் கொண்டாட வேண்டிய வயதில் அமைதியான இளைஞனாக அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார், இஸ்லாம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, திலிப்குமர் என்ற தனது பெயரை ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றிக்கொண்டார்.

1992ஆம் ஆண்டு ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கியமான தருணம். தொலைகாட்சி மற்றும் வானொலி வர்த்தக விளம்பரங்களுக்கான ஜிங்கிள்ஸ் மெட்டுகளை அமைத்துக்கொடுத்து , அந்தத்துறையில் தனி முத்திரை பதித்து வந்த ரஹ்மான் தனது வருமாணத்தில் சிறிது சிறிதாக பணம் சேர்த்து தனது 25 வயதில் தனக்கென்று சொந்தமாக இசைப்பதிவு மற்றும் இசைக்கலப்பு ஸ்டூடியோவை தொடங்கினார்.
தனது வீட்டுக்குப் பின்னாலேயே தொடங்கிய  இந்த ஸ்டியொவுக்கு ‘பஞ்சதன்- ரெக்கார்ட் இன்’ என்று பெயர் சூட்டி அழகு பார்த்தார்.

இன்று ஹாலிவுட் தரத்துக்கு இணையான இசைப்பதிவு மற்றும் இசைக்கலப்பு ஸ்டூடியோக்கள், சர்வதேச இசைப்பள்ளி ஆகியவற்றை சென்னையில் அமைத்துள்ளார். அவரது இசைப்பள்ளியில் வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமல்ல, மாநகராட்சிப்பள்ளியில் படிக்கும் ஏழைமாணவர்களும் படிக்கிறார்கள் இலவசமாக.  
1991... ஜிங்கிள்ஸ் இசையில் முத்திரை பதித்துக்கொண்டிருந்த ரகுமானை யாருடைய சிபாரிசும் இல்லாமல் அழைத்தார் இந்தியாவின் இணையற்ற இயக்குனர்களில் ஒருவரான   மணிரத்னம். அதுவரை பெரிய இயக்குனர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த மணிரத்னம் ‘ரோஜா’ படத்துக்கு ரகுமானின் இசை, பின்னனி இசையை பயன்படுத்திக்கொண்டார்.


முதல் வாய்ப்பை மிகச்சரியாகப்  பயன்படுத்திக்கொண்ட ரகுமான் தனது கம்போஸிங் திறமைகளை ரோஜா படத்தில் வெளிபடுத்தி இந்திய பாரம்பரிய இசையின் வேர்களையும், உலக இசையின் ஜீவனையும் கலந்து, ஒரு புத்தம் புது இளைய இசையை கொடுத்தார். ரகுமானை தமிழகம் மட்டுமல்ல,  மொத்த இந்தியாவும் யார் இந்த இளைஞன் என்று கேட்கவைத்தது.  ரோஜாவின் இசை கோடான கோடி ரசிகர்களையும், கூடவே  தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு ரகுமானின் இசைப்பயணம் புயல் வேகத்தில் புறப்பட்டது. 1997ஆம் ஆண்டு இசையமைத்த மின்சாரக் கனவு,  2002ஆம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக மீண்டும்  தேசிய விருதுகள் தேடி வந்தன.
இன்று ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இந்த இசைப்புயல் மட்டுமே.

ரோஜாவுக்கு பிறகு தமிழ்திரையில் மட்டுமின்றி, இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரகுமான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிக்கொடி கட்டினார்.

இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குஸ்ஸார், மேஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரகுமான்.  அதேபோல முன்னணி இயக்குனர் மணிரத்ணம்  முதல் அறிமுக இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா வரை  ஈகோவுக்கு துளியும் இடமில்லாமல் தரமான இசை என்பதை மட்டுமே நோக்கமாக்க் கொண்டு பணியாற்றிய வரும் இறை நம்பிகையாளர் இந்த ரகுமான்.
இவர் எட்டும் உயரங்களுக்கு சிகரம் வைத்தது போல தற்போது ஹாலிவுட் ஜாம்பவன் ஸ்டீவன் பீல் பெர்குடன் இணைந்து பணியாற்றி, இசை ஆல்பங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார் இந்த இசைபுயல்! தொடரட்டும் அவரது சாதனைகள்.. தமிழர்களின் வாழ்த்துக்களுடன்!  Thanks to http://www.4tamilmedia.com

Dec 30, 2011



Rolling Bridge.
Next


1. Rolling Bridge (United Kingdom)
The Rolling Bridge is a type of curling movable bridge completed in 2004 as part of the Grand Union Canal office and retail development project at Paddington Basin, London.
The Rolling Bridge was conceived by British designer Thomas Heatherwick, designed by SKM Anthony Hunt with Packman Lucas, and built by Littlehampton Welding.

It is twelve meters long and opens every Friday at noon. The Rolling Bridge lets boats pass by curling up until its two ends touch.

Prev
Hangzhou Bay Bridge.
Next

Hangzhou Bay Bridge, China
The Hangzhou Bay Bridge, the longest sea-crossing bridge in the world opened in May 2008.
It is 36 kilometres long and reduces the distance between Shanghai and Ningbo by 120 km.

Thanks Rediff.com

புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்தவர்கள்...



சென்னை: கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்தவர்கள் ஆஸ்திரேலியர்கள்தான். இதுவும் சமீபத்தில் அல்ல, அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்த வழக்கத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏதோ பெருமைக்காக இந்தப் பெயரை அவர்கள் சூட்டவில்லை. தங்களுக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவின் சின்னமாக உருவகப்படுத்த இப்படி பெயர் வைக்க ஆரம்பித்தார்களாம்.

1950ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கத்தை சுவீகரித்துக் கொண்டது அமெரிக்கா.

ஆளாளுக்கு பெயர் சூட்டுவதைத் தடுக்க, சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன.

2004- முதல்....

கடந்த 2004-ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 5 தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்த், பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்த் பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெயரை வங்கதேசம், ஜல் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில் லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

2011-ம் ஆண்டு நடப்பு சீசனில் கடந்த அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறி வைத்து தாக்கியது. இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்துதான் 'தானே' என்ற பெயர் தேர்வு செய்து சூட்டியுள்ளது.

இந்த தானே பெயரை வழங்கியது மியான்மர் (பர்மா). மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்து வரும் புயல்களின் பெயர்கள்...

முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா)

Dec 12, 2011

Robert Noyce - Intel

இன்றைய கணினித் தொழில் நுட்ப உலகில் அதிகம் பாவிக்கப்படும் ஒரு சொல் இன்டெல் (Intel). ரொபர்ட் நொய்ஸ் (Robert Noyce)


இன்றைய கணினிகள்  சிறு வடிவங்களில் உருவாகுவதற்குக்  காரணமாயிருந்தவர் எனச் சொல்வதிலும் பார்க்க, அதன் பிதாமகர் எனச் சொல்வது பொருத்தமாகவிருக்கும். 

அவருடைய 84வது பிறந்த தினத்தைதந்தை கூகிள் தன் தேடல் பக்கத்தில் இன்று சிறப்பித்திருக்கின்றது.  1927ம் ஆண்டு  டிசம்பர் 12 ந்தேதி பிறந்த இவர், ஒரு புகழ் மிகு பொறியியலாளர். 

அடிப்படையில் பொறியிலாளரான இவர் ஏனையவர்களுளோடு இணைந்து உருவாக்கிய நிறுவனம், Fairchild Semiconductor.  நுண் மின்கருவிகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்ததது.  1968ல் அவர் ஆரம்பித்த மற்றுமொரு நிறுவனம்தான், இன்றைய கணினி உலகில் தவிர்க்கப்பட முடியாத நிறுவனமாகத் திகழும் இன்ட்டெல் Inte. கணினிக்கத் தேவையான கணினிச் சில்லுகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது.

ஒரே அடிமனையில் தொகுசுற்றுக்களை உள்ளடக்கிய கணினிச் சில்லுகளை உருவாக்கும்  நுட்பத்தில்  ஏனைய எல்லா வகையான நுட்பங்களுக்கும் இதுவே அடிப்படையாக இருந்து வருவது மட்டுமல்லாது, சிறப்பானதாகவும் இருப்பது எனப் போற்றப்படுகிறது.

இவரது இந்த நுட்பச் சிறப்புக்காக,  'சிலிக்கான் பள்ளதாக்கு மேயர்  ' எனச் சிறப்பிகப்படும் நொய்சு 1990 ஜுன் 3ந் தெதி அமெரிக்காவின் டெக்சாசில் காலமானார். அவரது 84வது பிறந்ததினத்தை  கூகிள் தன் முகப்புப் பக்கத்தில் 
இன்று சிறப்பித்துள்ளது.

ரஜினிகாந்த்


1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற சாதாரண மனிதர் பெங்களூரு நகரில் பேருந்து நடத்துனராக தனது பணியை தொடங்கினார். அதற்கு முன்பு அவர் போர்ட்டராகவும் இருந்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலசந்தரின் கண்களில் சிக்கி இன்று உலக ரசிகர்கள் போற்றும் உன்னத நடிகராக உயர்ந்திருக்கிறார்.

உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி பார்க்கப்படுவதற்குக் காரணம் அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்வதுதான். அபூர்வராகங்களில் தொடங்கிய ரஜினியின் திரையுலக வாழ்க்கை எந்திரன் வரை 36 ஆண்டுகாலம் சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சில் அவரை மண்ணின் முடிசூடா மன்னனாக வலம் வர வைத்துள்ளது.

ஸ்டைல் மன்னன்

ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் புகுத்திய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதற்காகவே அவருக்கு ஒரு தனி ரசிகர்வட்டம் உருவானது.

நினைத்தாலே இனிக்கும், முரட்டுக்காளை, மனிதன், ராஜாதிராஜா அண்ணாமலை,தளபதி உள்ளிட்ட படங்களும், இன்றைய எந்திரன் வரை ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனத்திற்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கின்றனர்.

Dec 6, 2011

சலூன் கடைக்காரர்

 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பெரும் தொழிலதிபர்கள், அரச பரம்பரையினர், அரசியல்வாதிகள் வாங்க முடியும், வைத்திருக்க முடியும் என்று நம்புவது இயல்பு. ஆனால், பெங்களூரை சேர்ந்த சலூன் கடைக்காரர் ரூ.3 கோடி மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர காருக்கு சொந்தக்காரர் என்றால் நம்ப முடிகிறதா.

ரோல்ஸ் மட்டுமல்ல ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என மொத்தம் 67 கார்களுக்கு சாட்சாத் அவர்தான் சொந்தக்காரர்.

பெங்களூரை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் 9 வயதாக இருக்கும்போத தந்தை இறந்துவிட்டார். சொத்து சுகம் என்று எதையும் இவரது தந்தை வைத்து விட்டு போகவில்லை. வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் பெங்களூர் பிரிகேட் சாலையில் உள்ள தனது தந்தையின் சலூனை வாடகைக்கு விட்டார். தினமும் 5 ரூபாய் கிடைத்தது. 

ஆனால், அந்த வருமானம் வயிற்றைக் கழுவுவதற்கே பற்றாக்குறையானது. இதனால், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பாபு படிப்பை பாதியிலேயே கை கழுவி விட்டு குடும்ப சூழ்நிலையால் முழுநேரமாக முடிதிருத்தும் தொழிலில் இறங்கினார். தொழிலை கற்றுக்கொண்ட பின்னர், கடந்த 1991ம் ஆண்டு சொந்தமாக சலூன் ஒன்றை துவங்கினார்.

சாதாராண பாபு கொஞ்சம் கொஞ்சமாக தொழிலில் 'பாப்புலர்' பாபு ஆனார். போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் ரமேஷ் பாபுவின் வாடிக்கையாளர்களாக வரிசை கட்டினர். பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஆமிர்கான், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ரமேஷ் பாபுவின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், வருமானம் உயர்ந்ததால் கடந்த 1994ம் ஆண்டு ரமேஷ் பாபு ஒரு மாருதி ஆம்னி வேனை வாங்கி வாடகைக்கு விட்டார். முடிதிருத்தும் தொழில் போன்றே டாக்ஸி தொழிலிலும் வருவாயும், பிரபலமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் தேவைக்கு தக்கவாறு தனது டாக்ஸி நிறுவனத்துக்காக பல்வேறு கார்களை வாங்கினார்.

தற்போது ரமேஷ் பாபு வசம் ரூ.3 கோடி மதிப்புடையை ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார் உள்பட ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என அனைத்து நிறுவனங்களின் சொகுசு கார்களும், சாதாரண ரக கார்களும் இருக்கின்றன. மொத்தம் ரமேஷ் பாபு வசம் தற்போது 68 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நிலையில், ரமேஷ் பாபு வாழ்க்கையை மையமாக வைத்து 3 மொழிகளில் புதிய சினிமா ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர காரையும் பில்லியனர் பாபு வாடகைக்கு விடுகிறார்.  அந்த காருக்கு ஒரு நாள் வாடகை ஜஸ்ட் ரூ.50,000 மட்டுமே.

Dec 5, 2011

Logical Beliefs: The Right Direction to Sleep

In the temple God faces mostly East. Auspicious direction is East. Marriages and all auspicious functions are done facing East. Functions connected with death rituals, significantly are done with facing South.

Reference 1&2:
The principal Gods/ presiding deities of each direction (called the ashtadikpalar) are:

Northeast- Eeshanya- Ruled by Lord of all quarters or Eeshwara Siva (Religions,Luck and Faith) 

East- Aditya- Ruled by Sun God - Aditya (Seeing the world) 

Southeast- Agni- Ruled by Lord of Fire - Agni (Energy Generating) 

South- Yama- Ruled by Lord of Death - Yama (Damaging) 

Southwest- Pitru- Ruled by ancestors (History) 

West- Varuna- Ruled by Lord of water (Physical) 

Northwest- Vayu- ruled by Lord Of Winds (Advertisement) 

North- Kubera- Ruled by Lord of Wealth (Finance) 

Centre- Brahma- Ruled by Lord/Creator of the Universe (Desire)

Dec 2, 2011

அஞ்சரைப்பெட்டியில் மருந்து


அஞ்சரைப்பெட்டியில் மருந்து இருக்கையில் அஞ்ச வேண்டாம்

Household Remedies

அடுப்பங்கரையில் உள்ள அஞ்சரைப்பெட்டியில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டுமல்ல உடல் நலம் காக்கும் உண்ணத மருந்தாகவும் பயன்படுகிறது. கடுகு,சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் என வகை வகையாய் இடம் பெற்றிருக்கும் அஞ்சரைப்பெட்டியை அருமருந்து பெட்டி என்றே கூறலாம்.

மஞ்சள்

நோய் எதிர்ப்பு குணம் மஞ்சளில் அதிகம் உண்டு. வயிற்றுப் புண்களை குணமாக்கும். உடலில் அடிபட்ட காயங்களில் சிறிதளவு மஞ்சளை எடுத்து பூசினால் ரணம் குறையும். சளியை போக்கும்

கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பார்கள். அந்தளவிற்கு நோய் தீர்க்கும் சக்தி கடுகுக்கு உண்டு. அனைத்துவகை உணவுப் பொருளும் சமைத்து முடித்தவுடன் சுவைக்காக தாளித்து கொட்டப்படும் கடுகு விஷபேதி, வயிற்றுவலி,ஜன்னி போன்ற நோய்களுக்கு ஏற்றது.

வெந்தயம்

உடல் சூட்டை குறைக்கும். நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்

சீரகம்

உடலின் உள்ளே உள்ள நச்சுக்களை அகற்றுவதில் சீரகத்திற்கு ஈடு இணை இல்லை. இது அஜீரணம்,வயிற்றுவலி, பித்தமயக்கம் முதலிய நோய்களை போக்கும்.

மிளகு

திரிகடுகத்தில் ஒன்றாகிய மிளகு வயிற்றுக் கோளாறுகளை சீராக்கி பசியை அதிகரிக்கச்செய்யும். இது தொண்டை கமறலுக்கும், மூலரோகங்களுக்கும் ஏற்றது.

பெருங்காயம்

சாம்பார், ரசம் முதலியவற்றில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருங்காயம் வயிறு தொடர்பான நோய்களைப் போக்கும். வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு ஏற்றது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாதாரணமாக இவற்றை கொடுக்கலாம்.

லவங்கம், கிராம்பு

அசைவ சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை அஜீரணத்தைப் போக்கும், வாந்தியை நிறுத்தும். thatstamil.com

Nov 2, 2011

ராஜ ராஜ சோழன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழமன்னன் ராஜ ராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி செய்து போர்களில் வெற்றி பெற்ற மாமன்னன் ராஜராஜனுக்கு மும்முடிச்சோழன் என்ற பெயரும் உண்டு. தஞ்சையில் சிறப்பு வாய்ந்த பெரிய கோவிலை கட்டியதன் வாயிலாக தமிழர்களின் பெருமையை உலகறியச்செய்த மன்னன் ராஜராஜன்.

அறுபதாயிரம் யானைப்படையும், ஒரு லட்சம் குதிரைப் படையும், ஒன்றரை லட்சம் காலாட்படையும், ஆகியவற்றை உள்ளடக்கிய வலிமையான இராணுவத்தை கொண்டு ஆட்சி புரிந்துள்ளான். இந்தியாவின் முதற் கப்பற்படை அமைத்து கடல் கடந்து நாடுகளை வென்ற பெருமைக்குரிய மன்னன் ராஜராஜன். தஞ்சை, உறையூர் மற்றும் காஞ்சி மூன்று தலைநகரையும் கொண்ட தமிழ் நாட்டை அமைத்ததால் மும்முடிச்சோழன் என்ற சிறப்பு வாய்ந்த பெயரால் அழைக்கப்பட்டவன்.

DIABETIC?FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS



DIABETIC?
FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS

A woman (65) was diabetic for the last 20+ years and was taking insulin twice a day,
she used the enclosed homemade medicine for a fortnight and now
she is absolutely free of diabetes and taking all her food as normal including sweets ...........................

The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs.
I request you all please circulate the email below to as many people as you can and
let them take the maximum benefit from it.
AS RECEIVED :
DR. TONY ALMEIDA ( Bombay Kidney Speciality expert ) made the extensive
experiments with perseverance and patience and discovered a successful treatment for diabetes.
Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.

Ingredients:
1 - Wheat flour 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm

Method of Preparation Put all the above ingredients in 5 cups of water.
Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass jug or bottle.
How to use it? Take one small cup of this water every day early morning when your stomach is empty.
Continue this for 7 days. Next week repeat the same but on alternate days. With these 2 weeks of treatment you
will wonder to see that you have become normal and can eat normal food without problem. 

Sep 30, 2011

Indian Government totally online




Indian Government totally online 
                                                                                                                                   
Obtain:
*   Birth Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=1>
*   Caste Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=4>
*   Tribe Certificate <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=8>
*   Domicile Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=5>
*   Driving Licence <
http://www.india. gov.in/howdo/ howdoi..php? service=6>
*   Marriage Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=3>
*   Death Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=2>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Apply for:
*   PAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=15>
*   TAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=3>
*   Ration Card <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=7>
*   Passport <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=2>
*   Inclusion of name in the Electoral Rolls <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=10>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Register:
*   Land/Property <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=9>
*   Vehicle <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=13>
*   With State Employment Exchange <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=12>
*   As Employer <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=17>
*   Company <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=19>
*   .IN Domain <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=18>
*   
GOV.IN Domain <http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=25>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Check/Track:
*   Waiting list status for Central Government Housing <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=9>
*   Status of Stolen Vehicles <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=1>
*   Land Records <
http://www.india. gov.in/landrecor ds/index. php>
*   Causelist of Indian Courts <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=7>
*   Court Judgements (JUDIS ) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=24>
*   Daily Court Orders/Case Status <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=21>
*   Acts of Indian Parliament <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=13>
*   Exam Results <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=16>
*   Speed Post Status <
http://www.india. gov..in/howdo/ otherservice_ details.php? service=10>
*   Agricultural Market Prices Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=6>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Book/File/Lodge:
*   Train Tickets Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=5>
*   Air Tickets Online <
http://www.india. gov..in/howdo/ otherservice_ details.php? service=4>
*   Income Tax Returns <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=12>
*   Complaint with Central Vigilance Commission (CVC) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=14>
*  
 Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Contribute to:
*   Prime Minister's Relief Fund <
http://www..india. gov.in/howdo/ otherservice_ details.php? service=11>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Others:
*   Send Letters Electronically <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=20>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Recently Added Online Services
*   Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2691>
*   Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2693>
*   Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2694>
*   Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2695>
*   Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2697>
*   Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2698>
*   Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2699>
*   Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2702>
*   Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2700>
*   Andhra Pradesh: Online Motor Driving School Information <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2705  Global Navigation *   Citizens <http://www.india. gov.in/citizen. php>
*   Business (External website that opens in a new window) <
http://business. gov.in/>
*   Overseas <
http://www.india. gov.in/overseas. php>
*   Government <
http://www.india. gov.in/govt. php>
*   Know India <
http://www.india. gov.in/knowindia .php>
*   Sectors <
http://www.india. gov.in/sector. php>
*   Directories <
http://www.india. gov.in/directori es.php>
*   Documents <
http://www.india. gov.in/documents .php>
*   Forms <
http://www.india. gov.in/forms/ forms.php>
*   Acts <
http://www.india. gov.in/govt/ acts.php>
*   Rules <
http://www.india. gov.in/govt/ rules.php>
*   Schemes <
http://www.india. gov.in/govt/ schemes.php>
*   Tenders <
http://www.india. gov.in/tenders. php>
*   Home <
http://www.india. gov.in/default. php>
*   About the Portal <
http://www.india. gov.in/aboutthep ortal.php>
*   Site Map <
http://www.india. gov.in/sitemap. php>
*   Link to Us <
http://www.india. gov.in/linktous. php>
*   Suggest to a Friend <
http://www.india. gov.in/suggest/ suggest.php>
*   Help <
http://www.india. gov.in/help. php>
*   Terms of Use <
http://www.india. gov.in/termscond tions.php>
*   Feedback <
http://www.india. gov.in/feedback. php>
*   Contact Us <
http://www.india. gov.in/contactus .php>
*   Accessibility Statement <
http://www.india. gov.in/accessibi litystatement. php>